நீடித்த நிலைத்தன்மை

சிங்கப்பூரில் இயங்கிவரும் நிறுவனங்கள் நீடித்த நிலைத்தன்மையை நோக்கிச் செல்ல ஊக்குவிக்கும் விதமாக சிங்கப்பூரில் சுற்றுப்புறத் தீர்வுகள் வழங்கும் முதல் உற்பத்தி ஆலையான கிரீன் லேப் நிறுவனமும் நிஞ்சா வேன் தளவாட நிறுவனமும் கைகோத்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
கடந்த சில ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கரிமச் சேவைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் சிங்கப்பூரில் அமைக்கப்பட்டுள்ளன. அந்த நிறுவனங்களின் மூலம் குறிப்பிடத்தக்க வகையில் சிங்கப்பூரர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க முடியும் என மனிதவள அமைச்சர் டான் சீ லெங் வெள்ளிக்கிழமையன்று (மே 3) கூறினார்.
மதிப்பெண்களைத் தாண்டி, ஆர்வமுள்ள துறையில் கவனம் செலுத்தினால் உறுதியாக வெற்றி கிட்டும் என நம்புகிறார் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்மாணவர் மித்ரா ரென் சச்சிதானந்தன்.
வட்டார அளவில் நீடித்த நிலைத்தன்மை அம்சம்கொண்ட நிதித் தேவைகளை மேலும் நன்றாகப் பூர்த்திசெய்யும் நோக்குடன் ஊழியர்கள் புதிய திறன்களை வளர்த்துக்கொள்ள உதவ சிங்கப்பூர் அரசாங்கம், நிதித் துறையில் 35 மில்லியன் வெள்ளி முதலீடு செய்யவுள்ளது.
கரிம வெளியேற்றத்தைத் துல்லியமாக அளவிட உள்ளூர் வர்த்தகங்களுக்கு உதவும் வகையில் புதிய பதிவகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நீடித்த நிலைத்தன்மை தொடர்பான முடிவுகளை அவை எடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.